Friday, September 21, 2007

எனக்கொரு தோழி உண்டு


எனக்கொரு தோழி உண்டு
எப்போதும் சிரிப்போடு..
இளமை துள்ளலாய்..
மருண்ட விழியோடு
இருண்ட குழலோடு
ப்போதும் சிரிப்போடு..

பேசிப்பேசி நாட்கள் கரைய
சிரிப்பே ஒரு போர்வைதானடா என
எனக்குச் சொன்னாள் கண்ணீர் சிதற..
காட்டுச் சிறையில் அடைபட்ட
புள்ளிமான் நீயென புரியவைத்தாய்

பாலைவன மணலில்
தனிமை நடை பயிலும்
உன்னோடு கை கோர்த்து கரை சேர்க்க
நானுன்டு என் தோழியெ...
இப்போது அவள் சொன்னாள்
எனக்கொரு தோழன் உண்டு
எப்போதும் சிரிப்போடு..

1 Comments:

Anonymous Anonymous said...

thozhi-yai perumai paduthum rombe nalla kavithai...natpukku anbu than mukkiyam..really nice..keep it up...

September 24, 2007 4:31 PM  

Post a Comment

<< Home