Thursday, July 02, 2009

காதல் பக்கங்கள்




வெயிலும் நிலவும் முட்டிக் கொண்ட தருணங்களில்
உன் கார்மேகக் கரு விழிகளால்
என் புகைப்படம் நோக்கி நீ பிறப்பித்த
ஒரு மூன்றாம் பிறைப் புன்னகையில்
பிறந்தே விட்டது நமக்கான காதல் பக்கங்கள்

ஒரு பெண் பார்க்கும் நாளில்
உன் ஒற்றைப் புருவம் நெரித்து
கால் கோலம் பொட்டு
நீ வீசிய காதல் அம்புகளில்
என் இதயமெங்கும் சந்தோஷ சாரல்கள்...

எனக்கும் உனக்கும் இடையில்
இடைவெளி குறைந்த தருணங்களில்
தீயினை தீண்டாமலே
எனக்குள் நெருப்பு பிரவாகம்

எனக்கென எத்தனை உறவுகள் இருந்தாலும்
எனக்கென நீயொரு உயிராய்
உனக்கென நானொரு உருவாய்
வாழப்போகும் நிமிடங்களை நினைத்த போது
பிறந்தே விட்டது நமக்கான காதல் பக்கங்கள்...

Tuesday, December 16, 2008

ஒரு முறை.. ஒரே முறை...



நாளங்கள் எங்கும் நாணங்களும்...
இதழ் ஒரங்கள் எங்கும் ஈரங்களும்...
பனிப் பாதங்கள் தன்னில் கோலங்களும்...
சிறு அருவம் என்றாலும் விழி பாவங்களும்...
இப்படி முதல் முறையாக
உன்னை பார்த்த போதே எனக்குள்
சந்தோஷ சாரல்கள் சாமரம் வீசியதேனென்று தெரியவில்லை இன்னும்!!!
ஒரு நாள், உன்னை நானும் என்னை நீயும்
முதல் முறையாக பார்த்து கொண்ட போது
முட்டிக்கொண்ட நம் பார்வை அம்புகளில்
தெறித்து விழுந்ததென்னவோ நம் காதல் துளிகள் தான்...
உன் தாவணிக்குள் ஒளித்து வைத்த
இதயத்தின் சிணுங்கல்கள் கூட
என் காது வரை கவி பாடி செல்கிறதடி!!!
நேற்றைய இரவுகளில் கைபேசியின் உறக்கம் தொலைத்து
கனவுகளுடனே நினைவில்லாமல் பேசியதையும்,
என் நினைவுகளுடன் கனவுகளாய் கைது செய்திருக்கிறேன்...
இன்னும் காத்திருக்கிறேன்....
ஒரு முறை.. ஒரே முறை.. தோன்ற போகும்
அந்த ஒரு நொடி காதல் சந்தத்திற்காக..

Friday, August 08, 2008

விட்டு சென்றது நீதானா?


எனக்கும் உனக்குமான உறவுகள்
பிணக்கம் இல்லாமலே கலக்கமாய்..
தூங்காத விழிகளை
நான் பார்த்ததே இல்லை..
இன்று உன்னால் அதையும் பார்க்கிறேன்,
என் தூங்காத விழிகளால்..
உன்மீதான என் காதல்
உடைபெடுக்காமலே என்னை கொல்கிறதே...
நானும் நீயும் நாமாக
இருந்ததெல்லாம் கடந்த காலமானதா?
எனக்கு தெரிந்ததெல்லாம் உன்னை
காதலிப்பது மட்டும் தான்..
என்னை விட்டு சென்றுவிட
துடிக்கிறதா உன் மனம்?
உண்மையாக சொல்கிறேன்..
உனக்கு பிடிக்காதென்று தெரிந்தும் சொல்கிறேன்.
இப்பொழுதெல்லாம் நீ என்னுடன்
பெசவதில்லைஎன என்
கைபேசி கூட அழுகிறது..
இழந்தது நான் தானா? இல்லை
விட்டு சென்றது நீதானா?
ஒரு நிமிடம் உன்னை பிரிந்து செல்வதற்கே
மனம் துடிதுடித்தது அன்று..
சில விசயங்களை சொல்வதற்கே
பயமாக இருக்கிறது இன்று...
கனத்த இதயத்துடன்
கல்லறைக்கே செல்கிறேன் (விரைவில்)..

Thursday, April 03, 2008

சென்று வருகிறேன்...



விட்டுப் பிரிந்த நினைவுகளும்
தொட்டு தொலைந்த கனவுகளும்
கையை விட்டு கரைந்தாலும்,
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக் கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்...
என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச் செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் நியாபகம் வந்து செல்லும்..
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லி விடும்
அந்த கணம் அருகமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்க மாட்டேன்..
அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்..
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு

Friday, February 22, 2008

சந்தியா... சந்தியா...




சாரமில்லாமல் ஊசலாடிய
என் இதயத்திற்கு
சாரமும் ஈரமும் வந்ததெப்படி?
என் சரீரத்திற்க்கு
சாரீரம் வந்ததெப்படி?
சாளரம் இல்லாமலே... சந்தியா,
எனக்குள் தாராளமாய் நுழைந்துவிட்டாள்!!!

Friday, November 16, 2007

முற்றும்



நிஜங்கள் மாறும்போது
நிழல்களும் சாய்வதுண்டு!!!
பயணங்கள் தொடர்ந்தாலும்
சக பயணிகள் மாறுவதுண்டு!!!
முடிவில்லா இப்பயணத்தில்'
முற்றும்" போடும் நாளே முடிவாய்!!!
அன்பை தொலைத்து தேடி அலைபவனுக்கு
அள்ள அள்ள கிடைக்காவிடினும்
கிள்ளி தருமா உந்தன் உள்ளம்?


Friday, October 19, 2007

இன்று இலையுதிர்காலம் ..



உன் இதய வானில்
நானொரு நிலவாக நினைத்திருந்தேன்!!
இருண்ட மேகமாகி இன்று
கரைந்து காணாமலே போனேன்!!
செடியாக நீயிருந்தபோது
வேராகிட நினைத்திருந்தேன்!!
நானும் ஒரு இலைதான் என
எனக்கு புரியவைத்தாய்!!
இன்று இலையுதிர்காலம்...
உதிர்ந்த சருகாகி
உந்தன் வேருக்கே உரமாகி போனேன்!!