Tuesday, June 05, 2007

காதலாகி கசிந்துருகி


மயங்கி கிறங்கி மையலுற்று
காதலாகி கசிந்துருகி
காதல் பிறப்பெய்து
அதனால் இறப்பெய்து
இறைவனடி சேர்ந்தேன்!!!
இறைவன் கேட்டான், "என்ன செய்தாய்"?"
காதலுற்றேன்", விரக்தியாய் நான்.
"எது வேண்டும்? சொர்க்கமா? நரகமா?", கேட்டது கடவுள்.
புதிய இடம் வேண்டாம்
நரகமே தந்து விடு
நான் பழகிய இடம்!!!
நகைத்துச் சிரித்தார் கடவுள்...

ஒற்றை சூரியன்




கடல் சத்தம் காற்றில் இசைக்க
மணல் மீது மெல்ல மெல்ல
கனவோடு கைகோர்த்து நடந்தபோது
தூரத்து அலை நோக்கினாய் நீ!!!
உன் முகம் பார்த்தேன் நான் !!!
"என்னடா பண்றே?" என்று நீ கேட்டபோது
இங்கொரு சூரியனை பாரடி என்றேன்!!!
எங்கே என விழித்தாய்!!!
உன் முகம் தானடி என்றபோது
முகம் பொத்திச் சிரித்தாய்!!!
வேறொறு வேதனையில்
வெறுத்து பிரிந்தாலும்
இன்னும் அதே கடலோரத்தில்
நான் மட்டும் ஒற்றை சூரியனுடன்!!!