Friday, August 08, 2008

விட்டு சென்றது நீதானா?


எனக்கும் உனக்குமான உறவுகள்
பிணக்கம் இல்லாமலே கலக்கமாய்..
தூங்காத விழிகளை
நான் பார்த்ததே இல்லை..
இன்று உன்னால் அதையும் பார்க்கிறேன்,
என் தூங்காத விழிகளால்..
உன்மீதான என் காதல்
உடைபெடுக்காமலே என்னை கொல்கிறதே...
நானும் நீயும் நாமாக
இருந்ததெல்லாம் கடந்த காலமானதா?
எனக்கு தெரிந்ததெல்லாம் உன்னை
காதலிப்பது மட்டும் தான்..
என்னை விட்டு சென்றுவிட
துடிக்கிறதா உன் மனம்?
உண்மையாக சொல்கிறேன்..
உனக்கு பிடிக்காதென்று தெரிந்தும் சொல்கிறேன்.
இப்பொழுதெல்லாம் நீ என்னுடன்
பெசவதில்லைஎன என்
கைபேசி கூட அழுகிறது..
இழந்தது நான் தானா? இல்லை
விட்டு சென்றது நீதானா?
ஒரு நிமிடம் உன்னை பிரிந்து செல்வதற்கே
மனம் துடிதுடித்தது அன்று..
சில விசயங்களை சொல்வதற்கே
பயமாக இருக்கிறது இன்று...
கனத்த இதயத்துடன்
கல்லறைக்கே செல்கிறேன் (விரைவில்)..